10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்

  • IndiaGlitz, [Monday,May 25 2020]

10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த சூரஜ் என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உத்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் உத்ராவின் நகைகளை ஊதாரித்தனமாக சூரஜ் செலவு செய்து வந்ததாகவும் மேலும் பணம் நகை பெற்றோரிடம் போய் வாங்கிக் கொண்டு வருமாறு மனைவியை சூரஜ் வற்புறுத்தியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் திடீரென உத்ரா பாம்பு கடித்து இறந்து விட்டார். இதுகுறித்து உத்ராவின் அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது சூரஜ் தான் பத்தாயிரம் ரூபாய்க்கு பாம்பை வாங்கி ஒரு பையில் போட்டு வீட்டுக்கு வந்ததாகவும், 12 மணி வரை உத்ராவிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்து விட்டு அதன் பின்னர் உத்ரா தூங்கியவுடன் பாம்பை பையிலிருந்து எடுத்து போட்டுவிட்டு வெளியே சென்று விட்டதாகவும் தெரிகிறது. அதன் பின்னர்தான் பாம்பு உத்ராவை கடித்ததாகவும், இதனால் விஷம் ஏறி உத்ரா மரணமடைந்து விட்டதாகவும் தெரிகிறது

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே ஒருமுறை சூரஜ், தனது மனைவியை பாம்பால் கொல்ல முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த முயற்சியில் உத்ரா உயிர் தப்பி விட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சூரஜை கைது செய்த போலீசார் அவருக்கு பாம்பு கொடுத்த பாம்பாட்டி நண்பரையும் கைது செய்துள்ளனர். கட்டிய மனைவியை கொலை செய்ய 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கிய கணவனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

சென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

நடிகை அஞ்சலியின் வொர்க்-அவுட் பார்ட்னர்: வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தற்போது கோலிவுட் திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக விடுமுறையில் இருக்கும்

இனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்!!!

கொரோனா ஒரு பக்கம் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் வடகொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது இராணுவ பலத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கியூட்டாக ஒருவர், ஹாட்டாக ஒருவர்: 'மாஸ்டர்' பாடல்களுக்கு டான்ஸ் ஆடிய நடிகைகள்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் தீபாவளி அன்றுதான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து

தமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி