இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்த 42 வயது பெண்: நேரில் பார்த்த கணவரால் ஏற்பட்ட விபரீதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
42 வயது பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்ததை நேரில் பார்த்த கணவன் செய்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆசாரிபள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ராமதாஸ். இவருக்கு நீலாவதி என்ற மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
இந்த நிலையில் 42 வயது லீலாவதிக்கு டீன் ஏஜ் வயது உள்ள இளைஞர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதை ஒரு நாள் நேரில் பார்த்த கணவன் ராமதாஸ் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து அந்த இளைஞனுடன் நீலாவதி கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மனைவியுடன் சண்டை போட்டு விட்டு அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் ராமதாஸ்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது வீட்டின் பக்கம் அதிகாலையில் சென்று கொண்டிருந்தபோது பெட்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்ததையும், பெட் ரூமில் இருந்து முனகல் சத்தம் வந்ததையும் பார்த்தார். இதனையடுத்து அவர் சந்தேகப்பட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூமில் அந்த இளைஞனுடன் தனது மனைவி நீலாவதி உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த ராம்தாஸ், இருவரையும் அடித்து நொறுக்கினார். ஆனால் அதில் அந்த இளைஞர் தப்பித்து ஓடி விட்டதாக தெரிகிறது. அதன்பின் கத்தியை எடுத்து நீலாவதியை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.
இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது நீலாவதி கொலைக்கு அவரது மகன் காரணமாக இருக்கலாம் என அவரிடம் விசாரணை செய்தனர். தான் செய்த கொலை தன்னுடைய மகன் மீது விழுந்துவிடுமோ என்று அஞ்சி, ராமதாஸ் போலீசில் சரண் அடைந்து நடந்தது அனைத்தையும் காவல்துறையினர்களிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து ராமதாஸை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.