close
Choose your channels

மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன மனைவி: சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்

Monday, January 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தற்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சரண்யா திடீரென காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரமேஷ் ஆகியோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து சரண்யாவின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிசிஐடி போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவர் ரமேஷ் கொடுத்த தகவல் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவரை துருவித் துருவி விசாரித்தனர். இதில் ஒரு கட்டத்தில் அவர் தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மனைவி நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரை கொலை செய்ய தனது நண்பர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து கொலை செய்யுமாறு கூறியதாகவும் இதனையடுத்து அவர்கள் சரண்யாவை கொலை செய்து ஒரு பாழடைந்த கிணற்றில் பிணத்தை வீசி விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சரண்யாவின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சந்தேகம் காரணமாக மனைவியை கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.