close
Choose your channels

மனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்!

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரேக்க நாட்டு தலைநகர் ஏதேன்ஸில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்ட பின்பும் இரக்கமே இல்லாமல் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு என் குழந்தை, மனைவியை துன்புறுத்த வேண்டாம் என அந்தக் கணவர் பலமுறை கெஞ்சியும் கொள்ளையர்கள் இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சென்று இருப்பது அப்பகுதியில் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏதேன்ஸ் நகரில் வசிப்பவர் 33 வயதான பாபிஸ். இவரது மனைவி கரோலின் க்ரூச் (20). கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோலின் தனது வீட்டு மொட்டை மாடியில் அதிகாலை 5 மணிக்கு தனது 11 மாதக் குழந்தையுடன் நின்றிருக்கிறார். அப்போது பாபிஸ் கீழே உள்ள ஹாலில் உறங்கி கொண்டு இருக்கிறார். இந்நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி என இருவரையும் கட்டிப்போட்டு குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்துள்ளனர். மேலும் வீட்டில் பணம் எங்கே இருக்கிறது எனக் கேட்டு உள்ளனர்.

இப்படி கேட்ட உடனேயே பாபிஸ் ஒரு பெட்டியில் பணம் இருப்பதை கூறியிருக்கிறார். 15,000 யூரோ மதிப்புள்ள நகைகள், 25,000 யூரோ பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்ட கொள்ளையர்களிடம் என் மனைவியை ஒன்றும் செய்யாதீர்கள் என பாபிஸ் கெஞ்சியுள்ளார். ஆனால் இந்த வார்த்தைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாத கொள்ளையர்கள் போகிற போக்கில் கரோலினை கொலை செய்துள்ளனர்.

இதனால் நிலைகுலைந்து போன பாபிஸ் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த போலீஸார், பல நாட்களாக கொள்ளையர்கள் இந்த வீட்டை நோட்டம் இட்டு இருக்க வேண்டும். அதனால்தான் இவ்வளவு கச்சிதமாக கொள்ளை அடிக்க முடிந்து இருக்கிறது என்று கூறியதோடு கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 250,000 டாலர்கள் பரிசு தொகையை அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.