மனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்!

  • IndiaGlitz, [Friday,May 14 2021]

கிரேக்க நாட்டு தலைநகர் ஏதேன்ஸில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்ட பின்பும் இரக்கமே இல்லாமல் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு என் குழந்தை, மனைவியை துன்புறுத்த வேண்டாம் என அந்தக் கணவர் பலமுறை கெஞ்சியும் கொள்ளையர்கள் இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சென்று இருப்பது அப்பகுதியில் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏதேன்ஸ் நகரில் வசிப்பவர் 33 வயதான பாபிஸ். இவரது மனைவி கரோலின் க்ரூச் (20). கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோலின் தனது வீட்டு மொட்டை மாடியில் அதிகாலை 5 மணிக்கு தனது 11 மாதக் குழந்தையுடன் நின்றிருக்கிறார். அப்போது பாபிஸ் கீழே உள்ள ஹாலில் உறங்கி கொண்டு இருக்கிறார். இந்நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி என இருவரையும் கட்டிப்போட்டு குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்துள்ளனர். மேலும் வீட்டில் பணம் எங்கே இருக்கிறது எனக் கேட்டு உள்ளனர்.

இப்படி கேட்ட உடனேயே பாபிஸ் ஒரு பெட்டியில் பணம் இருப்பதை கூறியிருக்கிறார். 15,000 யூரோ மதிப்புள்ள நகைகள், 25,000 யூரோ பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்ட கொள்ளையர்களிடம் என் மனைவியை ஒன்றும் செய்யாதீர்கள் என பாபிஸ் கெஞ்சியுள்ளார். ஆனால் இந்த வார்த்தைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாத கொள்ளையர்கள் போகிற போக்கில் கரோலினை கொலை செய்துள்ளனர்.

இதனால் நிலைகுலைந்து போன பாபிஸ் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த போலீஸார், பல நாட்களாக கொள்ளையர்கள் இந்த வீட்டை நோட்டம் இட்டு இருக்க வேண்டும். அதனால்தான் இவ்வளவு கச்சிதமாக கொள்ளை அடிக்க முடிந்து இருக்கிறது என்று கூறியதோடு கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 250,000 டாலர்கள் பரிசு தொகையை அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அலைக்கு நடுவிலும் சுவாரசியம்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 110 வயது தாத்தா!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஒட்டுமொத்த தற்போது இந்தியாவே பீதி அடைந்து இருக்கிறது.

டெஸ்ட் எடுத்து ஒருவாரமாகியும் ரிசல்ட் வரவில்லை: கொரோனாவுக்கு சகோதரனை இழந்த தமிழ் நடிகை ஆதங்கம்!

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கிய 'கோ' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் சமீபத்தில் தனது சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

'வேகத்துக்கு நான் பழசு, வெட்கத்துக்கு நான் புதுசு': டிக்டாக் இலக்கியாவின் வேற லெவல் மூவ்மெண்ட்!

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற இலக்கியா, இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் மற்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய கிளாமரான வீடியோக்களை பதிவு செய்து

மங்கலாக இருந்தாலும் மாஸ் ஆக இருக்குது: ஷிவானியின் உச்சபட்ச கிளாமர் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் வரவேற்ப்பை பெறும் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு

'சூரரைப் போற்று' படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்கள்