close
Choose your channels

ஃபேஸ்புக் காதலிக்காக மனைவியை கூலிப்படையால் கொலை செய்ய முயன்ற கணவன்!

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேஸ்புக்கில் காதலித்த ஒரு பெண்ணுக்காக கட்டிய மனைவியை கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முயன்ற கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கன்னியாகுமாரி பகுதியைச் சேர்ந்த வெள்ளிக்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த ரூபஸ் ஜெரால்டு என்பவருக்கும் தேவகுமாரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு தேவகுமாரியின் பெற்றோரின் ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் தேவகுமாரியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டிய சீர்களை செய்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்த ரூபஸ், திடீரென ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஃபேஸ்புக்கில் உருவான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதன் பின்னர் ஒரு நாள் ஃபேஸ்புக் காதலியை கேரளா சென்று நேரில் சந்தித்த ரூபஸ், அவரது அழகில் மயங்கி மனைவியின் நகைகளை விற்று அந்தப் பெண்ணுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்துள்ளார்

பேஸ்புக் காதலி விவகாரத்தை தேவகுமாரி கண்டுபிடித்து கணவரை கண்டித்துள்ளார். ஆனால் மனைவியுடன் சண்டை போட்டு அவரை தாய் வீட்டுக்கு விரட்டி விட்ட ரூபஸ், பேஸ்புக் காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து குடித்தனம் நடத்தி உள்ளார். இதனை அறிந்த தேவகுமாரி தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடன் முறையிட இருதரப்பு பெரியவர்களும் இருவரையும் சமாதானம் செய்து பேஸ்புக் காதலியை அனுப்பி வைத்துவிட்டு தேவகுமாரியுடன் குடும்பத் குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்தினார். சில மாதங்கள் ஒழுங்காக குடும்பம் நடத்திய ரூபஸ் அதன்பின் மீண்டும் பேஸ்புக் காதலியுடன் தொடர்பு கொண்டார். இதனால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது

இந்த நிலையில் கேரளாவில் இருந்து பேஸ்புக் காதலியை அழைத்து வந்து பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்து இரகசிய கொடுப்பதும் செய்துள்ளார் ரூபஸ். இதனால் மீண்டும் கணவன் மனைவி இடையே சண்டை நடக்க, மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்த ரூபஸ், கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் இந்தக் கொலை முயற்சியில் தேவகுமாரி தப்பிவிட்டதை அடுத்து போலீசிலும் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ரூபஸ் மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்

பேஸ்புக் காதலுக்காக கட்டிய மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சித்த கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.