close
Choose your channels

சமந்தா தாக்கல் செய்த அவதூறு வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு!

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது சொந்த வாழ்க்கை குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்த யூட்யூப் சேனல்களுக்கு எதிராக ஹைதராபாத் நீதிமன்றத்தில் சமந்தா பதிவு செய்த வழக்கில் அதிரடி உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து சமந்தா தனது கணவரை ஏன் விவாகரத்து செய்கிறார் என்பது குறித்து யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் பரவியது.

இதனை அடுத்து தன்னைப் பற்றி பல்வேறு வதந்திகள் வருவது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்றும் எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் நிறுவனங்கள் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் சமந்தா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரணை செய்த நீதிபதி சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட செய்திகளை ஒளிபரப்ப கூடாது என்றும் ஏற்கனவே யூடியூப் சேனல்களில் இடம்பெற்றுள்ள அவரது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் அதே நேரத்தில் சமந்தாவுக்கும் நீதிபதி ஒரு அறிவுரை கூறியுள்ளார். சமந்தா தனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவுகளை இனி சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.