close
Choose your channels

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த தாமரைப்பூ… அப்படி என்ன ஸ்பெஷல்?

Monday, October 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகச் சாதனையை அங்கீகரிக்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் தாமரை பூ வடிவிலான மோதிரம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. இந்த மோதிரத்தை ஹைத்ராபாத்தை சேர்ந்த கோட்டி ஸ்ரீகாந்த் என்பவர் உருவாக்கி இருக்கிறார். ஹைத்ராபாத் நகரில் உள்ள சாண்டுபாய் தி டயமண்ட் ஸ்டோர் எனும் கடைக்காக உருவாக்கப்பட்ட இந்த தாமரைப்பூ வடிவிலான மோதிரத்திற்கு பிரம்மக் கமலம் எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த மோதிரம் 7,801 இயற்கை வைரக்கற்களால் உருவாக்கப் பட்டிருக்கிறது. பொதுவா இந்தியக் கலாச்சாரத்தில் முக்கிய இடம்பிடித்து இருக்கும் தாமரை (கமலம்) பூ மங்கலகரமான விஷயத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. அந்த வகையில் பூஜை, அலங்காரம், தெய்வீகம் என அனைத்திலும் முதன்மை இடம் பிடித்த தாமரை பூ வடிவில் செய்யப்பட்ட இந்த மோதிரத்தை இயற்கையாக விளைந்த வைரக் கற்களை கொண்டே உருவாக்கி இருக்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மோதிரத்திற்கான வேலைப்பாடு 11 மாதங்கள் கழிந்து முடிந்ததாகவும் கூறப்படுகிறது. தூய்மையின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டு இருக்கும் தாமரைப் பூ வடிவிலான மோதிரம் கடந்த 2019 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கப் பட்டு தற்போது அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இதன் காரணக் கர்த்தாவான கோட்டி ஸ்ரீகாந்த்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.