பிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் நான்கு பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் பெண்கள் பாதுகாப்பு குறித்து தெலுங்கானா மாநிலம் கூடுதல் அக்கறை எடுத்து ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

அந்த வகையில் இதுவரை மெட்ரோ ரயில்களில் பாதுகாப்பு கருதி பெப்பர் ஸ்ப்ரே போன்ற பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பெண்கள் தங்களுடன் பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்துச் செல்லலாம் என்று ஐதராபாத் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார குற்றவாளிகள் இடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பெண்கள் தங்களுடன் பெப்பர் ஸ்பிரேவை எடுத்து செல்லலாம் என்று ஐதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் என்.வி.எஸ் ரெட்டி சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏற்கனவே இது போன்ற ஒரு முடிவை பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் காணாமல் போனதாக வரும் புகார்கள் குறித்து உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

அதேபோல் பிரியங்கா ரெட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணமாக இனிமேல் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல் கொடுக்க வேண்டும் என்றும் பாட்டில்களில் பெட்ரோல் கொடுக்கக்கூடாது என்றும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பிரியங்கா ரெட்டி கொலை போல் மேலும் ஒரு கொலை ஏற்படாமல் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

More News

5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு

திருமணம் முடிந்து ஏழு மாதமே ஆன ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய மரணமடைந்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஆறு மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல்

திருச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்

பாட்டுப் பாடிய தோனி.வைரல் வீடியோ..!

எம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பரவலாக பலரால் பேசப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வலம் வருகிறார்.

தளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்த