close
Choose your channels

காதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்!

Tuesday, November 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காதல் தோல்வியால் மனம் உடைந்து பாகிஸ்தானுக்கு தெரியாமல் சென்று சிக்கிக் கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாபுராவ் என்பவரின் மகன் பிரசாந்த். இவர் பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியராக வேலை செய்து கொண்டிருந்த போது தன்னுடன் பணிபுரிந்த ஸ்வப்னிகா என்பவரை காதலித்தார். இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்த நிலையில் ஸ்வப்னிகா திடீரென தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து சென்று விட்டார். அவரிடமிருந்து வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதால் மனம் வெறுத்த பிரசாந்த் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் பணி புரிந்து கொண்டிருந்த பிரசாந்த், பணி நிமித்தமாக சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவில் அவர் பணியில் இருந்தபோது காதல் தோல்வியால் மனம் போன போக்கில் சுற்றியதாகவும் அப்போது தெரியாமல் பாகிஸ்தான் எல்லையை தாண்டி விட்டதாகவும் இதனை அடுத்து பாகிஸ்தான் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பதாகவும் தெரிகிறது.

காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த பிரசாந்த், பாதை தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்கு சென்றுவிட்டதாகவும் எனவே தனது மகனை இந்தியாவிற்கு அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்றும் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பாபுராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.