லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கின்றேனா? நடிகர் மாதவன் விளக்கம்!

  • IndiaGlitz, [Saturday,June 12 2021]

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ’ரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்தில் இடம்பெற்ற ஷட்டர் காட்சி இன்றும் ரசிகர்கள் மனதில் நினைவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது, அதேபோல் லிங்குசாமி இயக்கிய ’வேட்டை’ திரைப்படத்திலும் மாதவன் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ராம் பொத்திநேனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிப்பவர் நடிகர் மாதவன் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வந்தன

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார். இயக்குனர் லிங்குசாமி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகப்பெரிய சந்தோஷம் என்றும் அவர் ஒரு அருமையான இயக்குனர் மட்டுமின்றி அன்பான மனிதரும் கூட என்று கூறினார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது அடுத்த் திரைப்படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலில் உண்மை இல்லை’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து லிங்குசாமி படத்தில் மாதவன் வில்லனாக நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

'குக் வித் கோமாளி' சீசன் 3 எப்போது? குட்டீஸ்களிடம் தகவல் சொன்ன புகழ்

'குக் வித் கோமாளி' சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டுமே பெரிய அளவில் பிரபலமானது என்பதும் குறிப்பாக சீசன் 2 யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில், வேற லெவலில் பிரபலமானது

சம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டு வந்தபோது திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் அடுத்த வாரமே நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களால்

ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு!

அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை டெர்ரக் சவுவின் என்ற காவல்துறை அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில்

எம்ஜிஆர் கையில் இருக்கும் இந்த குழந்தை, இன்று மாஸ் ஹீரோ: யாரென கண்டுபிடியுங்கள்!

முன்னாள் முதல்வர், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கையில் இருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை இன்றைய மாஸ் ஹீரோ

அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சினிமா பின்னணி உள்ளவராக இருந்தாலும் அருண்விஜய் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடிக்க 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.