ரூ.350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கின்றாரா நிதின் சத்யா?

வெங்கட் பிரபு இயக்கிய ’சென்னை-28’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் நிதின் சத்யா அதன் பின்னர் ’சத்தம் போடாதே’ ’சரோஜா’ ’பந்தயம்’ ’முத்திரை’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி ’ஜருகண்டி’ என்ற திரைப்படத்தை தயாரித்த நிதின் சத்யா, தற்போது ’லாக்கப்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் அடுத்த திரைப்படமான ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நிதின் சத்யா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்தது. ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் நிதின் சத்யா நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இது குறித்து விளக்கமளித்த நடிகர் நிதின் சத்யா ’ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நான் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி போலியானது என்றும் அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்றும் அந்த படத்தின் குழுவினர் தன்னை இதுவரை அணுகவில்லை என்றும் இந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

More News

ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத  விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி

பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்றும் அதனை நான் செய்யாததால் வாய்ப்புகளை இழந்தேன் என்றும் கமல் பட நடிகை

கொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!!! 8 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று

லெபனான்: இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய செவிலியின் அசாத்தியம்!!! வைரலாகும் புகைப்படம்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்  நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன், அதன் பின்னர் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

'மாநாடு' திரைப்படம் டிரப்பா? சுரேஷ் காமாட்சி விளக்கம்

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'.