அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இல்லை: தங்கர்பச்சான் விளக்கம்

கடந்த 1998ஆம் ஆண்டு மம்முட்டி, தேவயானி ரஞ்சித் நடிப்பில் பாரதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’மறுமலர்ச்சி’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து 22 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

‘மறுமலர்ச்சி’ திரைப்படத்தை இயக்கிய பாரதியே இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாகவும் மம்முட்டியுடன் இது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ‘மறுமலர்ச்சி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த தங்கர்பச்சான் இரண்டாம் பாகத்திலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தங்கர்பச்சான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ‘மறுமலர்ச்சி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் தான் பணிபுரியவில்லை என்றும் அந்த அந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 13 நாட்களில் தங்கர்பச்சான் தனது அடுத்த படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.