close
Choose your channels

ஜெயலலிதாவின் கர்ச்சிப்புக்கு கூட நான் தான் உரிமையாளர்: தீபா

Saturday, November 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 9ஆம் தேதி முதல் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததன் தொடர்ச்சியாக நேற்று ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை குறித்த செய்தி கேள்விப்பட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, உடனடியாக போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தார். ஆனால் அவரை போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை

இதனால் ஆவேசம் அடைந்த தீபா, நான் தான் இந்த வீட்டின் சட்டரீதியான வாரிசு என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் போலீசார் அனுமதிக்காததால் செய்தியாளர்களிடம் தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்தார். அவர் கூறியதாவது: 

காவல்துறையினர் என்னை ஏன் தடுக்கின்றனர் என்பது புரியவில்லை. என்னுடைய உரிமையை நிலைநாட்ட, அனுமதிக்க மறுக்கிறார்கள். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் வீடியோ கேசட் விற்கத்தான் அத்தையிடம் வந்தனர். என் அத்தை சினிமாவில் வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு இது. எனக்கு சொத்துகள் எல்லாம் வேண்டாம். அத்தையின் வீட்டுக்குள் என்னை அனுமதிக்க வேண்டும். போலீஸ் விவேக்கை மட்டும் அனுமதித்துள்ளனர். அம்மா ஸ்தானத்தில் இருந்து என்னை வளர்த்திருக்கிறார் அத்தை. அவருடைய கர்ச்சீப்புக்குக் கூட நான்தான் உரிமையாளர். சட்டம் அதைத்தான் சொல்கிறது' என்று கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.