சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படத்தில் நான்.. அதற்காக மன்னிப்பும் கேட்டேன்: அமீர்கான்


Send us your feedback to audioarticles@vaarta.com


சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்துள்ளேன் என்றும், அதற்காக அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டேன் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அமீர்கான் நடிப்பில் உருவாகிய "சித்தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் "கல்யாண சமையல் சாதம்" என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் புரமோஷன் பேட்டி ஒன்றில் அமீர்கான் கூறியதாவது: "லால் சிங் சத்தா’ திரைப்படம் தோல்வியடைந்த பிறகு மன உளைச்சலில் இருந்தேன். அதன் பிறகு திரை உலகிலிருந்து விலக முடிவு செய்தேன். அந்த வகையில் தான் "சித்தாரே ஜமீன்தார் பர்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். ஆனால் அதிலிருந்து நான் விலக முடிவெடுத்தேன்.
இயக்குநர் பிரசன்னா என்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அதே நேரத்தில், ‘நீங்கள்தான் என்னுடைய முதல் சாய்ஸ்’ என்று கூறினார். அதன் பிறகு எனக்கு பதிலாக, இந்த படத்தில் ஹிந்தியில் பர்கான் அக்தர் மற்றும் தமிழில் சிவகார்த்திகேயனை இயக்குநர் தேர்வு செய்தார்.
அதன் பிறகு தான், எனக்கு திடீரென, ‘இந்த படத்தில் நடிக்கலாம், நல்ல ஸ்கிரிப்ட்’ என்று தோன்றியது. என்னுடைய முடிவை பிரசன்னாவிடம் சொல்லிய போது, ‘நீங்கள்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். நீங்கள் எடுப்பதுதான் முடிவு. எப்போதுமே என்னுடைய முதல் சாய்ஸ் நீங்கள்தான்,’ என்று கூறினார்.
அதன்பிறகு பர்கான் அக்தர், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடமும் பேசினேன். இருவருமே, ‘இது நீங்கள் நடிக்க வேண்டிய படம் தான்,’ என்று கூறிய போது, அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர்கள், ‘மன்னிப்பு எல்லாம் தேவையில்லை. இது உங்களுக்கான படம், தாராளமாக நடியுங்கள்,’ என்று கூறினார்கள். இருவருமே ஆதரவாக இருந்தார்கள்.
அதன்பிறகு தான், இந்த படத்தில் நான் நடித்தேன்," என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com