close
Choose your channels

கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை: 'த்ரிஷ்யம் 3' குறித்து ஜீத்துஜோசப்

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. முதல் பாகத்தைப் போலவே இந்த படத்தையும் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி என்பவர் சமீபத்தில் பேட்டியளித்த போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இயக்குனருக்கு இருப்பதாகவும் அதை அவர் இயக்குவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ‘த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதையை அனுப்புமாறு இணையதளங்களில் ஜீத்து ஜோசப் கேட்டுக்கொண்டதாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது.

இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க வதந்தி என்றும் ‘த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கு கதையை அனுப்புமாறு கேட்டுக் கொண்டதாக பரவும் செய்தி போலியானது என்றும் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கதைகளை கடன் வாங்கவேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.