நான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

அன்றாட சமையலுக்கு பெரிய அளவில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை, தங்கத்தின் விலைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வால் சமையலுக்கு வெங்காயத்தை மிகச் சிறிய அளவிலேயே பயன்படுத்தும் நிலைமைக்கு பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு கிலோ ரூ.67-க்கு வெங்காயத்தை இறக்குமதி செய்து, சந்தையில் கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.அப்போது பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயத்துடன் அதிகம் தொடர்பில்லாத குடும்பத்திலிந்து வந்திருக்கிறேன்” என்று கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சி உறுப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர்.

பின்னர், வெங்காயத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அதனை சேமிக்கும் முறையில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

More News

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி.நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் கைது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களால் 15 வயதே ஆன பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட நடிகை கோரிக்கை

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான விஜய்யின் 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவின்போது 'நல்ல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யுங்கள்,

ஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

சென்னை கேகே நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஷூவுக்குள் பாம்பு இருப்பதை கவனிக்காமல் அதனை சுத்தம் செய்ததால் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்

பிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் நான்கு பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு

திருமணம் முடிந்து ஏழு மாதமே ஆன ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய மரணமடைந்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது