close
Choose your channels

ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியதில்லை: பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி

Tuesday, August 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசி இருப்பதாகவும் அவரின் அரசியல் வருகைக்காக தான் காத்திருப்பதாகவும் இன்று பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்த் அவர்கள் மிக நல்ல மனிதர். அவரிடம் நான் நிறைய ஆன்மீகம் சம்பந்தமாக பேசி இருக்கின்றேன். அவரிடம் பேசினால்தான் அவர் எவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர் என்பது தெரியும்.

தமிழ்நாட்டில் ஒரு புதுவகையான புதுமையான அரசியல் கொடுக்க வேண்டும் என்றும், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அவருடைய தனிப்பட்ட ஸ்டைலில் அரசியல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரை நான் வரவேற்கிறேன். தமிழகம் ரஜினிகாந்த் மாதிரி ஒரு நல்ல மனிதருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அவர் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து நான் விமர்சனம் செய்ய முடியும். நான் அவருடன் ஆன்மீகம் பற்றி நிறைய பேசி இருந்தாலும் அரசியல் குறித்து இதுவரை பேசவில்லை. அரசியலுக்காக அவர் தயாராகி வருகிறார் என்று நான் நினைக்கின்றேன். அவருக்கான நேரம் வரும்போது கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார்’ என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos