close
Choose your channels

ரோஹித்தின் இரண்டு சிக்ஸர்களை நம்பவே முடியவில்லை: பிரபல நடிகர் டுவீட்

Wednesday, January 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் எதிர்பாராத வெற்றி குறித்து பிரபல நடிகர் தனது டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் எடுத்தது. பின்னர் 180 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதனை அடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 6 பந்தில் 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வெற்றிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ரோகித் சர்மா அடுத்தடுத்த பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியை அடுத்து இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்த எதிர்பாராத வெற்றியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வெற்றி குறித்து கருத்து கூறிய இந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் ’இந்திய அணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அந்த இரண்டு பந்துகளையும் சிக்ஸர் அடித்தது நம்ப முடியாத வகையில் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பச்சனின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.