close
Choose your channels

மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் அதிரடி

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசியது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக பேசி விட்டதாகவும் நடக்காத ஒன்றை அவர் கற்பனையாக பேசிக்கொண்டு பேசி விட்டதாகவும் யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று விளக்கம் அளித்துள்ளார். 1971ல் நடந்த ஊர்வலத்தில் ராமர் சீதை உடையில்லாத படங்களை கொண்டு சென்றது உண்மை, அவற்றுக்கு செருப்பு மாலை அணிவித்தது உண்மை என அவுட்லுக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளில் படித்தது, கேள்விப்பட்டத்தை தான் நான் சொன்னேன். இல்லாத ஒன்றையோ, நடக்காத ஒன்றையோ நான் சொல்லவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர். ‘சாரி, என்னால் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை மேலும் மேலும் கிளற வேண்டாம், இது மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல, மறக்கக்கூடிய சம்பவம்’ என்றும் ரஜினிகாந்த் மேலும் தெரிவித்தார். ரஜினியின் இந்த பதிலை அடுத்து பெரியார் ஆதரவாளர்கள் அடுத்தகட்டமாக என்ன செய்ய போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.