close
Choose your channels

பிரதமருக்கு முழு ஆதரவு கொடுப்பேன். டுவிட்டரில் ரஜினிகாந்த்

Friday, September 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் கேரள முதல்வர், டெல்லி முதல்வர் ஆகியோர்களை சந்தித்து அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் ரஜினி தனது அரசியல் முடிவை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இன்னொரு பக்கம் அவரது ரசிகர்கள் வழிமேல் வைத்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் ஸ்வாச் பாரத் திட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். தூய்மை என்பது தெய்வத்திற்கு சமமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களை ஒழிக்கும் விதமாக கடந்த 2014ஆம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 'ஸ்வாச் பாரத் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.