ரஜினியும் நானும் தேர்ந்தெடுத்த பாதைகள் வேறு: அரசியல் குறித்து கமல்

  • IndiaGlitz, [Friday,September 22 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிப்பது உறுதி என்ற நிலையில் ரஜினியுடன் அவர் இணைந்து செயல்படுவாரா? அல்லது தனியாக செயல்படுவாரா? என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது. இதற்கு அவர் பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியலில் இறங்குவது குறித்த தன்னுடைய திட்டத்தை ரஜினியை பலமுறை சந்தித்து விளக்கியிருப்பதாகவும், ஊழலை ஒழிப்பதுதான் இருவரின் கொள்கை என்றாலும் இருவரும் தேர்வு செய்துள்ள பாதைகள் வேறு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் கூட தனியாகவே தேர்தலை சந்திக்க விரும்புவதாக கூறிய கமல், தனியாக தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறுவது கடினம் தான் என்றாலும் முன்பு இதுபோல் நடந்த உதாரணம் உண்டு என்று அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அரசு கட்டாயக்கல்யாணம் போல் இருப்பதாகவும், பொதுமக்கள் அதில் இருந்து வெளியே வர விரும்புவதாகவும் கமல் கூறினார்.

More News

இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்ல தகுதி பெற்ற திரைப்படம் அறிவிப்பு

ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சிறந்த வெளிநாட்டு படம் விருதுக்கு அனுப்ப 'நியூட்டன்' என்ற படம் தேர்வாகியுள்ளது.

கொடைக்கானலில் த்ரிஷாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? விவரிக்கின்றார் இயக்குனர்

ரொமான்ஸ் நாயகியாக கடந்த பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்த த்ரிஷா, அரண்மனை 2' படத்தை அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.

தளபதியின் மெர்சல்: தெலுங்கு மாநிலங்களில் மெர்சலான பிசினஸ்: 

தளபதி விஜய்யின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலும் நல்ல பிசினஸ் கிடைக்கும் என்பது தெரிந்ததே

இன்று மாலை பறக்க போகும் ஓவியாவின் 'பலூன்'

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஓவியா, கடந்த சில வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், அவரது புகழ் இன்னும் சமூக வலைத்தளங்களில் நீடித்து கொண்டே இருக்கின்றது.

'மெர்சல்' டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

விஜய் வேஷ்டி சட்டையுடன் ஒரு அரங்கில் நடந்து வரும்போது பின்னால் வடிவேலு வெள்ளை நிற கோட் சூட்டுடன் நிற்கின்றார்