close
Choose your channels

திவாலான அமெரிக்க வங்கியால் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்: பிரபல நடிகை..!

Wednesday, March 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி என்ற வங்கி சமீபத்தில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வங்கியால் தான் கோடி கணக்கான பணத்தை இழந்து விட்டேன் என பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் திவால் ஆகிவிட்டன. ஒரே வாரத்தில் இரண்டு வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் நிலை கேள்விக்குறியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஷ்ரோன் ஸ்டோன் என்பவர் இந்த வங்கியில் கோடி கணக்கில் முதலீடு செய்ததாகவும் அதனால் தனக்கு மிகுந்த நஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தைரியமான நட்சத்திரம் என்ற விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷ்ரான் ஸ்டோன், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி அளித்தார்.

அதன் பிறகு அவர் பேசிய போது ’பணத்தை எங்கே செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் நமக்கும் தெரியாமல் சில விஷயங்கள் நடக்கின்றது என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான் முதலீடு செய்த பெரும் பணத்தை சிலிக்கான் வேலி வாங்கியால் இழந்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

டோட்டல் ரீகால், பேஸிக் இன்ஸ்டிக்ட், கேசினோ உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடிகை ஷ்ரோன் ஸ்டோன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.