ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்த திரைப்படம் ’மாமனிதன்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் ஒருசில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், அதன் பின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது

இந்த நிலையில் இந்த படம் குறித்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். திரு,யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு arrangements செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை’ என்று கூறியுள்ளார்.

மாமனிதன்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் இந்த படம் திரையில் வெளியாகும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர் என்பதும் என் சுகுமார் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

திரையரங்கில் ரிலீஸ் செய்யுங்கள்: அனுஷ்கா பட தயாரிப்பாளருக்கு சென்சார் அதிகாரிகள் கூறிய அறிவுரை

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும் நடைபெறவில்லை. படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், புரமோஷன் பணிகள், சென்சார்

நாகர்கோவில் காசி கூறிய 12 பெண்கள் யார் யார்? பரபரப்பு தகவல்

நாகர்கோவில் காசி தன்னிடம் ஏமாந்த 12 பெண்களின் பெயரை கூறியுள்ளதாகவும் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

2 வயதுக்கு குறைவான குழந்தையா??? மாஸ்க் போடாதீங்க... எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான் மருத்துவ சங்கம்!!!

ஜப்பான் நாட்டின் குழந்தை மருத்துவச் சங்கம் தற்போது நாடு முழுவதும் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மூன்று முறை திருமணமான 62 வயது பெண்ணுடன் 26 வயது இளைஞர் காதல்!

மூன்று முறை திருமணமாகி மகன்கள், மகள்கள் பேரக் குழந்தைகள் இருக்கும் 62 வயது மூதாட்டி ஒருவரை 26 வயது இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரசிகரின் குறும்பான கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் அர்த்தமுள்ள பதில்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் வெகு அரிதாகவே ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுவார் என்பதும் அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதும் தெரிந்ததே.