close
Choose your channels

2012க்கு பின் நான் சசிகலாவை பார்க்கவே இல்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில், இன்று காலை அவரது இல்லத்தில் பேட்டி அளித்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் இதுவரை இல்லாத வகையில் அவர் பல உண்மைகளை தெரிவித்து வருகிறார்.
அதில் ஒன்றுதான் 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை தான் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை என்றும் தொலைபேசியில் கூட அவரிடம் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் சசிகலாவிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்றும் அவரிடம் எந்தவிதமான உத்தரவையும் பெறவில்லை என்றும் அவர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.