close
Choose your channels

உலகின் ஒரே சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன்: ஒரே செல்பியால் உலகப் புகழ் பெற்ற இளைஞர் பேட்டி 

Tuesday, December 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சமீபத்தில் சந்தித்த மாற்றுத்திறனாளி பிரணவ் என்பவர் அவருடன் ஒரே ஒரு செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உலகப்புகழ் பெற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரணவ் , அதில் ரஜினியை சந்திக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்த பேட்டியை படித்த காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் அவர்கள், ரஜினி-பிரணவ் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்

முதலில் கேரளாவில் இருந்து கராத்தே தியாகராஜ வீட்டுக்கு வந்த பிரணவ், பின்னர் நேற்று மாலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது கனவு, தனது எதிர்காலத் திட்டங்கள், தனது லட்சியம் ஆகியவை குறித்து சுமார் 20 நிமிடங்கள் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரஜினி ’நீங்கள் நேர்மையான ’என்பதால் உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். அதற்கு நானும் துணையாக இருப்பேன் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்

இந்த நிலையில் ரஜினி சந்திப்பு குறித்து ஒரு வீடியோவை பிரணவ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தேன். வாழ்க்கையில் எனக்கு இதுதான் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அவர் என்னை கட்டிப்பிடித்து, என் காலை பிடித்து கைகுலுக்கினார். எனக்கு பொன்னாடை போர்த்தி என்னுடன் செல்பி எடுத்து கொண்டார். ரஜினியை நான் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று நிகழ்ச்சியான குரலில் அந்த வீடியோவை கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.