உலகின் ஒரே சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன்: ஒரே செல்பியால் உலகப் புகழ் பெற்ற இளைஞர் பேட்டி 

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சமீபத்தில் சந்தித்த மாற்றுத்திறனாளி பிரணவ் என்பவர் அவருடன் ஒரே ஒரு செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உலகப்புகழ் பெற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரணவ் , அதில் ரஜினியை சந்திக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்த பேட்டியை படித்த காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் அவர்கள், ரஜினி-பிரணவ் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்

முதலில் கேரளாவில் இருந்து கராத்தே தியாகராஜ வீட்டுக்கு வந்த பிரணவ், பின்னர் நேற்று மாலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது கனவு, தனது எதிர்காலத் திட்டங்கள், தனது லட்சியம் ஆகியவை குறித்து சுமார் 20 நிமிடங்கள் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரஜினி ’நீங்கள் நேர்மையான ’என்பதால் உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். அதற்கு நானும் துணையாக இருப்பேன் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்

இந்த நிலையில் ரஜினி சந்திப்பு குறித்து ஒரு வீடியோவை பிரணவ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தேன். வாழ்க்கையில் எனக்கு இதுதான் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அவர் என்னை கட்டிப்பிடித்து, என் காலை பிடித்து கைகுலுக்கினார். எனக்கு பொன்னாடை போர்த்தி என்னுடன் செல்பி எடுத்து கொண்டார். ரஜினியை நான் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று நிகழ்ச்சியான குரலில் அந்த வீடியோவை கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அடுத்த அட்டகாசமான அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் அவர் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் 

நாடாளுமன்றத்தில் "Propose" செய்த எம்.பி..!

இத்தாலி நாட்டில் எம்பி ஒருவர் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, தனது தோழியிடம் காதலை கூறிய சம்பவம் உலக அளவில் பிரபலமாகியுள்ளது...

ரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா?

தமிழ் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் அதன் பின்னர் உச்சத்துக்குச் சென்று விடலாம் என்பது இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களின் நிலையாக உள்ளது 

செல்போனில் மூழ்கிய தாய், மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை: சென்னையில் பயங்கரம்

பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் பலியாகி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரியதாக உள்ளது.

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது நானா? அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகர் மறுப்பு!

உலகில் உற்பத்தியாகும் 30 சதவீத ஆக்ஸிஜன், அமேசான் காட்டில் தான் உற்பத்தி ஆவதாக ஒரு செய்தி வெளியாகிய நிலையில் அந்த அமேசான் காடுகளில் உள்ள மரங்களை அழிக்கும் நோக்கில்