close
Choose your channels

7 சிக்ஸர் அடிக்க முடிந்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட ரஸல்

Saturday, April 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 206 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 12 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கிட்டத்தட்ட பெங்களூர் வெற்றி பெற்றுவிட்டதாகவே பலர் நினைத்தனர். ஆனால் அந்த நினைப்பை தவிடுபொடியாக்கியவர் ஆண்ட்ரு ரஸல்.

19வது ஓவரில் அவர் அடித்த 29 ரன்கள் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த போட்டியில் ரஸல் 13 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும்.

இதுகுறித்து ரஸல் கூறியபோது, 'நான் எப்போதும் விளையாடும்போது ஸ்கோர் போர்டை பார்க்க மாட்டேன். என்னால் எத்தனை சிக்ஸர் அடிக்க முடியுமோ, அத்தனை சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்பதிலேயே எனது கவனம் இருக்கும். அதனால்தான் என்னால் ஏழு சிக்ஸர்கள் அடிக்க முடிந்தது' என்று கூறினார். நேற்றைய போட்டியில் அவர் தான் ஆட்டநாயகன் விருதினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.