close
Choose your channels

ஒரு அதிசய பெண்ணை பார்த்தேன்.. வார்த்தைகளால் விளக்க முடியவில்லை: KPY பாலா

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலமாக KPY பாலா ஒரு அதிசய பெண்ணை பார்த்ததாகவும் அந்த பெண்ணை பார்த்ததும் அவர் செய்த காரியத்தால் தனக்கு வார்த்தைகளே வெளிவரவில்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமான பாலா, அதன் பின்னர் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, காமெடி ராஜா கலக்கல் ராணி, கதாநாயகி உள்பட பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக சேவை செய்வதில் பாலாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்பதும் அவர் இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரொக்கம் கொடுத்தது உள்ளிட்ட செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் KPY பாலா சற்றுமுன் தனது சமூக வலைதளத்தில் ஒரு இளம் பெண்ணின் கையை பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணின் கையில் KPY பாலா என்ற டாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறிய போது ’நான் சமீபத்தில் இந்த அதிசய பெண்ணை பார்த்தேன். அவர் கையில் என்னுடைய பெயரை பச்சை குத்தி கொண்டிருந்தார். நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்று கூறியதோடு என் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. அந்த பெண்ணின் மரியாதைக்கு எனது மிகுந்த நன்றி. நான் இதை பார்த்ததும் மிகுந்த உணர்ச்சி வசப் பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் பாலா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.