close
Choose your channels

அஜித்தை சந்தித்தால்... ஆசையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யாராய்

Thursday, July 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தை நேரில் சந்தித்தால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவதாக முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அஜித்தும் ஐஸ்வர்யாராயும் '‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ என்ற படத்தில், இணைந்து நடித்துள்ளனர். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஐஸ்வர்யாராய், ''கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தில் நானும் அஜித்தும் நடித்திருந்தாலும் அவருடன் நிறைய காட்சிகளில் நான் நடிக்கவில்லை. இருப்பினும் படப்பிடிப்பில் அவரை சந்தித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது அவரது குடும்பத்தை சந்தித்ததும் என் நினைவில் உள்ளது. மீண்டும் அவரை சந்தித்தால், அவரது இந்த தகுதியான வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்" என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார்.

மேலும் அஜித், மிக மென்மையான, அற்புதமான மனிதர் என்றும், ரசிகர்களிடம் அவர் பெற்றிருக்கும் இந்த அன்பையும், வெற்றியையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ரசிகர்கள் இந்த அளவுக்கு அவர் மீது அன்பு வைத்திருக்கின்றனர் என்றால் அந்த அன்புக்கு அவர் தகுதியானவர் என்றும் ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யாராய், 'அவர் எந்த படம் இயக்கினாலும் அதில் தான் நடிப்பேன் என்றும் அவர் எனது குரு மட்டுமின்றி குடும்ப நண்பரும் கூட என்றும் ஐஸ்வர்யாராய் தெரிவித்தார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.