அடுத்த மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்: வீரமரணம் அடைந்த வீரரின் தந்தை அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,February 15 2019]

நேற்று பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்றின் மனிதவெடிகுண்டு தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சி,ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பஹல்பூர் என்ற பகுதியை சேர்ந்த ரத்தன் தாகூர் என்பவரும் ஒருவர். இவருடைய மரணம் குறித்த செய்தி அறிந்ததும் இவரது தந்தை செய்தியாளர்களிடம் கூறியபோது, 'தாய்நாட்டிற்காக எனது ஒரு மகனை இன்று இழந்துள்ளேன். ஆனாலும் எனது அடுத்த மகனையும் தாய்நாட்டிற்காக சேவை செய்ய ராணுவத்திற்கு விரைவில் அனுப்பி வைப்பேன். இந்த இழப்பிற்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று கூறினார்.

இந்த தந்தையின் தேசப்பற்று மெய்சிலிரிக்க வைப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது
 

More News

கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டுக்கு செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், 'கஜினி' உள்பட ஒருசில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

காஷ்மீர் தாக்குதல்: கோலிவுட் திரையுலகினர் கண்டனம்

காஷ்மீரில் மனிதவெடிகுண்டு நடத்திய பயங்கர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியாகிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுவொரு ஆரம்பம்தான்: காஷ்மீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் வீடியோ எச்சரிக்கை

காஷ்மீரில் நேற்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து ஒன்றை வெடிகுண்டுகள் நிரம்பிய தீவிரவாதியின் கார் மோதியதால் பேருந்தில் பயணம் செய்த 39 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர்.

90ml படத்தின் கதை ஓவியாவின் உண்மைக்கதையா? அனிதா உதூப்

சமீபத்தில் வெளியான ஓவியாவின் 90ml படத்தின் டீசர் வெளியான நிலையில் இந்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பாணி படமென்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

மார்ச் 1 ரிலீசில் இணைந்த இன்னொரு படம்

வரும் மார்ச் 1ஆம் தேதி அருண்விஜய் நடித்த 'தடம்' மற்றும் சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்