close
Choose your channels

டாக்டர் மனைவிக்கு ஐஏஎஸ் அதிகாரி விதித்த வித்தியாசமான நிபந்தனை!

Saturday, February 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விதித்த வித்தியாசமான நிபந்தனை பெரும் அவரது சொந்த ஊரை சேர்ந்த பொதுமக்களை பெரும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

பேராவூரணி அருகே ஒட்டங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே படித்து வித்தியாசமான அதிகாரியாக உள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இவரது குடும்பத்தினர் பெண் பார்த்தபோது, இவரை பல பெண்கள் திருமணம் செய்ய முன் வந்தனர். அவர்களில் ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்தவ பெண்களும் அடங்குவர். இருப்பினும் இவர் ஒரு டாக்டர் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார். அதன் பின்னர் அவர் நினைத்த மாதிரியே சென்னை நந்தனம் கல்லூரி கணிதப் பேராசிரியர் ஒருவரின் எம்பிபிஎஸ் படித்த மகளான டாக்டர் கிருஷ்ணபாரதி என்ற பெண் கிடைத்தார். இவர்களுடைய திருமணம் சமீபத்தில் நடந்தது.

திருமணத்துக்கு முன்னர் தனது வருங்கால மனைவியிடம் சிவகுரு ஒரு நிபந்தனை விதித்தார். தனது சொந்த ஊரான ஒட்டங்காடு என்ற கிராமத்திற்கு வாரத்துக்கு இரண்டு நாள் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாராம். அந்த நிபந்தனைக்கு மணமகள் ஒப்புக் கொண்டதை அடுத்து இந்தத் திருமணம் நடந்துள்ளது. தனது சொந்த ஊருக்கு மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே டாக்டர் பெண்ணை திருமணம் செய்துகொண்ட சிவகுரு பிரபாகரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.