டாக்டர் மனைவிக்கு ஐஏஎஸ் அதிகாரி விதித்த வித்தியாசமான நிபந்தனை!

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விதித்த வித்தியாசமான நிபந்தனை பெரும் அவரது சொந்த ஊரை சேர்ந்த பொதுமக்களை பெரும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

பேராவூரணி அருகே ஒட்டங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே படித்து வித்தியாசமான அதிகாரியாக உள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இவரது குடும்பத்தினர் பெண் பார்த்தபோது, இவரை பல பெண்கள் திருமணம் செய்ய முன் வந்தனர். அவர்களில் ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்தவ பெண்களும் அடங்குவர். இருப்பினும் இவர் ஒரு டாக்டர் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார். அதன் பின்னர் அவர் நினைத்த மாதிரியே சென்னை நந்தனம் கல்லூரி கணிதப் பேராசிரியர் ஒருவரின் எம்பிபிஎஸ் படித்த மகளான டாக்டர் கிருஷ்ணபாரதி என்ற பெண் கிடைத்தார். இவர்களுடைய திருமணம் சமீபத்தில் நடந்தது.

திருமணத்துக்கு முன்னர் தனது வருங்கால மனைவியிடம் சிவகுரு ஒரு நிபந்தனை விதித்தார். தனது சொந்த ஊரான ஒட்டங்காடு என்ற கிராமத்திற்கு வாரத்துக்கு இரண்டு நாள் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாராம். அந்த நிபந்தனைக்கு மணமகள் ஒப்புக் கொண்டதை அடுத்து இந்தத் திருமணம் நடந்துள்ளது. தனது சொந்த ஊருக்கு மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே டாக்டர் பெண்ணை திருமணம் செய்துகொண்ட சிவகுரு பிரபாகரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

கணவரை கொலை செய்துவிட்டு மகள் மீது பழி போட்ட தாய்! கள்ளக் காதலால் விபரிதம் 

சேலம் அருகே கணவனை கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியை தனது 16 வயது மகள் மீது போட்ட தாய் குறித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நயன்தாராவின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த படங்களில் ஒன்று 'மூக்குத்தி அம்மன்'. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில்

நீங்கள் சராசரியாக மாதம் எவ்வளவு ஜிபி டேட்டா பயன்படுத்துகிறீர்கள் தெரியுமா..?

இந்தியாவில் தனி நபர் சராசரியாக மாதம் 11 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறாராம். ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 நிமிடங்களை செலவழிக்கிறாராம்.

கொரோனா வைரஸ்.. அதிக மக்கள்.. இந்தியா தாக்குப்பிடிக்குமா?! அமெரிக்கா கவலை.

அமெரிக்கா இந்தியா மீது மட்டும் கவலை கொள்ளவில்லை. உலகில் இருக்கும் மற்ற வளரும் நாடுகளும் இதை எப்படி எதிர்கொள்ளும் என்ற சந்தேகத்தில் உள்ளது.

சிஏஏ சட்டதிருத்தம்: களத்தில் இறங்க ரஜினிகாந்த் முடிவு

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக இஸ்லாமிய அமைப்பினர் போராடி வருகின்றனர்.