இந்தியாவிடம் எனது வித்தை செல்லுபடியாகும். வங்கதேச பந்துவீச்சாளர்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இதில் ஒரு ஒற்றுமை என்னவெனில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் பிரிவதற்கு முன்னர் ஒருங்கிணைந்து இருந்தபோது அந்த நாட்டை இங்கிலாந்து ஆட்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா vs வங்கதேச போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட, நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்த முடியுமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. அதே நேரத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை தோற்கடித்த வங்கதேச அணிக்கு இந்தியாவை தோற்கடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்கதேச அணியின் வேகப் பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தன்னால் இந்தியாவை நிலைகுலைய செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்-ஆப் பந்துகளை வீசுவதில் வல்லவரான ரஹ்மான், தனது பந்துவீச்சு இதுவரை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் கைகொடுக்கவில்லை என்றாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிச்சயம் எனது வித்தை செல்லுபடியாகும் என்று கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்த அனுபவம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஹ்மானின் நம்பிக்கை பலிக்குமா? அல்லது இந்தியாவின் வெற்றி தொடருமா? என்பதை ஞாயிறு அன்று நடைபெறும் அரையிறுதி போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்

More News

லூசுப்பசங்க! பாடகி சின்மயி சொல்வது யாரை தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அரசின் கால்நடைப் பாதுகாப்பு துறை சார்பாக உரிய உரிமங்கள் பெற்று பசுக்களை ஏற்றி வந்த 5 லாரிகள் மீது 50 பேர் கொண்ட கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது...

அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த நடிகையின் பிணம்

பாலிவுட் நடிகை ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

கூவத்தூரில் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதா? கருணாஸ் விளக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே பல புலனாய்வு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன என்பது தெரிந்ததே....

முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை. தமிழன் தான் முதல்வராகணும். பாரதிராஜா

தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று அவ்வப்போது சில அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் கூறி வந்தபோதிலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி முதல்வர்களாக இருந்தபோது இந்த குரல்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கப்பட்டது...

'ஓகே கண்மணி' நாயகனின் அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தின் நாயகன் துல்கார் சல்மான் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் 'சாவித்ரி' வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடித்து வருகிறார்...