எங்க அணிக்கு வந்துடுங்க: அதிருப்தியில் இருக்கும் இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு பெயர் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் திறன் வாய்ந்த விஜய்சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அம்பத்தி ராயுடு ஏமாற்றம் அடைந்தார். இதனையடுத்து அவர் '3D' குறித்து ஒரு டுவிட்டையும் பதிவு செய்தார்.

மேலும் தவான், புவனேஷ்குமார், விஜய்சங்கர் ஆகியோர் காயம் அடைந்தபோதாவது அம்பத்தி ராயுடுவை அணிக்கு அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மயங்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார். இதனால் அதிருப்தியில் இருக்கும் அம்பத்தி ராயுடுவை ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டின் டுவிட்டர் பக்கத்தில், ' மயங்க் அகர்வால் இதுவரை 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து விட்டார். எனவே அம்பத்தி ராயுடு இனியாவது தீவிரமாக யோசித்து 3டி கண்ணாடியை கழற்றிவிட வேண்டும். ராயுடுவுக்காக நாங்கள் தயாரித்துள்ள ஐஸ்லாந்து நாட்டின் குடியுரிமை ஆவணங்களை படித்து பார்க்க அவருக்கு சாதாரண கண்ணாடிகளே போதும். எங்கள் அணிக்கு வந்து விடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆட்டம் மிகவும் பிடிக்கும், என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது.

More News

மெர்சல்-பிகில் படங்களுக்கு இடையிலான ஒரு முக்கிய வித்தியாசம்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படத்தில் அப்பா விஜய்யான தளபதி கேரக்டர் பிளாஷ்பேக்கில் மட்டுமே வரும்.

பூமாதேவி வாய பொளக்கப்போறா... பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!

உலகிலேயே அதிக பரப்பளவில் காடுகளை கொண்ட பகுதி பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் தான். இங்கு பல அரிய வகை மரங்கள், மூலிகைகள் கிடைப்பது மட்டுமின்றி

மீராமிதுனுக்கு போலீஸ் சம்மன்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது வழக்கு இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ்! வனிதா கைதா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய்யின் அடுத்த பட நாயகிகள் இவர்களா? 

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனேகமாக இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்