'இட்லி கடை' தள்ளி போவதை உறுதி செய்த தயாரிப்பாளர்.. சோலோ ரிலீஸாகும் 'குட் பேட் அக்லி'


Send us your feedback to audioarticles@vaarta.com


வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனுஷின் "இட்லி கடை" மற்றும் அஜித்தின்‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக "இட்லி கடை" திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டியில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
"இட்லி கடை" திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் ஒரே காட்சியில் நடிக்க வேண்டியிருப்பதால், அனைவரது கால்ஷீட்டை ஒரே நேரத்தில் முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், படப்பிடிப்பு தாமதமாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.
"ஒரு நல்ல படம் பொறுமையாக ரிலீஸ் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளோம். இன்னும் பத்து நாட்களில் அதிகாரப்பூர்வமாக புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்போம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, "இட்லி கடை" ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மட்டுமே தமிழ் புத்தாண்டு விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com