சொந்த அணியைவிட ஐபிஎல் முக்கியம்? இளம் வீரரின் முடிவால் அதிர்ந்து போன இங்கிலாந்து!

இங்கிலாந்து அணியில் இளம் ஆல் ரவுண்டராக இருந்து வரும் சாம் கரன் தனது சொந்த நாட்டுப் போட்டியை விட சென்னை சிஎஸ்கே எனக்கு முக்கியம் எனக் கூறி இருக்கிறார். இந்தத் தகவலால் இங்கிலாந்து அணி தற்போது விழிப்பிதுங்கி இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் போட்டிகளை காரணம் காட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடர் போட்டியில் சாம் கரன் களம் இறங்க வில்லை. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒட்டுமொத்த போட்டியிலும் களம் இறங்குவது சந்தேகம்தான் எனத் தெரிவித்து உள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே சார்பாக விளையாடி வரும் சாம் கரன் ஒரு ஆல்ரவுண்டர் பிளேயராக கவனம் பெற்று வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே தகுதிச் சுற்றுக்கே தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு எப்படியாவது வெற்றி வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று கேப்டன் தோனி அணியை கட்டமைத்து வருகிறார்.

இந்நிலையில் 22 வயதே ஆன இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும். எனது அணி தகுதிச் சுற்றில் தேர்ச்சி பெற்றுவிட்டால் அணிக்காக கடைசி வரை விளையாடியே ஆக வேண்டும். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணியில் என்னால் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் சிஎஸ்கே அணிக்கு உற்சாகமாக இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு உவப்பு அளிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து… உயிரிழப்பு 100 ஐ தொட்ட அவலம்!

மத்திய ஆப்பிரிக்கா நாடான ஈக்வடார் நாட்டின் தலைநகர் கினியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது

பிரசாந்தின் 'அந்தகன்' படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்: யார் இயக்குனர்?

பாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 'அந்தாதூன்' என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தை தியாகராஜன் தனது மகன் பிரசாந்த் நடிப்பில் தயாரிக்க இருந்தார் என்றும்

சாணக்கியத் தனத்தை மிஞ்சிய எடப்பாடியின் சாமர்த்தியத்தனம்!

தமிழக சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி அதிமுக கட்சித் தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து கூட்டணியை கட்டமைத்து வருகிறது

நடராஜனுக்கு காயமா? டி20 கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று முடிந்தது.

'குக் வித் கோமாளி' அஸ்வின் குறித்து உணர்வுபூர்வ பதிவிட்ட ஷகிலா மகள்: வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.