close
Choose your channels

நான் முதலமைச்சராக பதவி ஏற்றதும் செய்ய போகும் முதல் காரியம்: சூப்பர் மாடல் மீராமிதுன்

Wednesday, August 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஏற்கனவே ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சனம் செய்த மீராமிதுன், த்ரிஷா உள்பட ஒருசில நடிகைகளையும் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்துள்ள வீடியோவில், ‘நான் விரைவில் தமிழக முதலமைச்சராக வருவேன் என்றும் முதலமைச்சர் ஆனபின்னர் நான் செய்யப்போகும் முதல் காரியம் தமிழகத்தில் சைபர் கிரைம் போலீசார் பிரிவு வலுப்படுத்தப்படும் என்றும் நாலு போலியான சமூக வலைத்தள அக்கவுண்ட் வைத்துக் கொண்டு பெண்களை கீழ்த்தரமாக பேசுபவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு பெண் நல்ல நிலைக்கு வரும்போது பாராட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்றும், ஆளை வைத்து தரக்குறைவான விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெண்கள் குறித்து தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட மாட்டேன் என்று கூறிய மீராமிதுன் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் தன்னைப்பற்றி இனி மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தால் அதே வார்த்தையால் விஜய், சூர்யா குடும்பத்தின் பெண்களையும் விமர்சனம் செய்வேன் என்று கூறியுள்ளார்.

மீராமிதுனின் இந்த வீடியோவுக்கு விஜய், சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நெட்டிசன்களும் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.