வங்கக்கடலில் நிவர் புயல்: சென்னை அருகே கரை கடக்குமா?

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு சமீபத்தில் உருவானதை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் நவம்பர் 25ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கிமி வரை பலத்த காற்று வீசுவதோடு, கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த நிவர் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது, ’தற்போது இருக்கும் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்தால் காரைக்கால்- கடலூர் இடையே ’நிவர்’ புயல் கரையை கடக்கும் என்றும், ஒருவேளை புயலின் வேகத்தில் தாமதமானால் புதுவை- சென்னை இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் அதாவது நவம்பர் 25ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இந்த புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது மிக விரைவில் தெரிய வரும்.

இந்த நிலையில் நிவார் புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் எதிர்கொள்ள மின்துறை தயார்: இருப்பதாகவும், 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது என்றும், புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

More News

செல்போன் அலர்ஜியா??? இப்படியும் ஒரு விசித்திர மனிதன்!!!

பிரிட்டன் நாட்டில் வாழும் 48 வயதான ஒரு நபருக்கு மின்சாரத்தினால் இயங்கும் எந்தப் பொருட்களைப் பார்த்தாலும் அலர்ஜியாம்.

83 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உடலில் இருக்குமா??? பீதியை கிளப்பும் புதுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் ஒருவரைப் பாதித்தால் 14 நாட்கள் வரை மட்டுமே உடலில் இருக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு முதற்கொண்டு அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் அளித்து வந்தனர்.

ஜான்சன் & ஜான்சனுக்கு வந்த பெரும் சோதனை… தொடரும் பரபரப்பு!!!

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் அழகுசாதனப் பொருட்களுக்கு இந்தியா போன்ற பல வளரும் நாடுகளில் பலத்த வரவேற்பு இருந்து வந்தது.

பிக்பாஸ் நாமினேஷனில் திடீர் திருப்பம்: அர்ச்சனாவுக்கு ஆப்பு வைத்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாமினேஷன் படலத்தில் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் என்பதை பார்த்தோம்.

பணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். பிளாக் காமெடி வெப்சீரிஸ் ஆக உருவாகி வரும்