பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றம்? ஒட்டுமொத்த எவிக்சனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு அனைத்து போட்டியாளர்களும் திடீரென வெளியிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அது மட்டுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார் 9 ஆயிரம் கன அடி வினாடிக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதும் இந்த ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் இதனால் போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது

எங்களுக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியே வேண்டாம், நாங்கள் வீட்டுக்கு செல்கிறோம் என்று பல போட்டியாளர்கள் கூறியதை அடுத்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இதனால் தான் நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அவை இன்று ஒளிபரப்ப இருப்பதாகவும் இன்று இரவுக்குள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தண்ணீரை வெளியேற்ற கால தாமதம் ஆனால் நாளைய நிகழ்ச்சிக்கு என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்