என் வாழ்க்கை வரலாற்றை மூன்றே நாட்களில் படமாக்கலாம்: இளையராஜா

இந்திய திரையுலகில் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகியும், உருவாக்கப்பட்டும் வருகின்றன. தோனி, சச்சின், மேரிகோம், உள்பட பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது. மோடி, ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும் உருவாகி வரும் நிலையில் இசைத்துறையில் யாரும் செய்ய முடியாத சாதனை செய்து, கின்னஸ் சாதனை படைத்த இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறும் விரைவில் திரைப்படமாகவுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா கூறியபோது, 'என்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறேன். விரைவில் வெளியாகும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன். மூன்றே நாட்களில் படமாக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது.இசை அமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்' என்று மாணவர்களுக்கு இளையராஜா அறிவுரை கூறினார்.

More News

உங்கள் பெயரில் உள்ள 'ராதா'வை எடுத்துவிடுங்கள்: விஷால்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி மீது ஏன் இன்னும் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என திரையுலகை சேர்ந்த பலர் கருத்து தெரிவித்து

ராதாரவி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்த விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நேற்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்

ராதாரவிக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள பல பிரபலங்கள் ஒரே ஒரு பேட்டி அல்லது ஒரே ஒரு மேடைப்பேச்சால் பல இழப்புகளை சந்தித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

ராதாரவிக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா?

நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி மீது திமுக அதிரடி நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி,  நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்