மோடி அம்மாவுக்கு பின் இப்போதுதான்.. பாரதிராஜா மகனுக்காக இளையராஜா செய்த செயல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமான நிலையில், அவருக்காக திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்ற இருப்பதாக இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 25 ஆம் தேதி திடீரென காலமானார். இதனால், ஒட்டுமொத்த திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, 26 ஆம் தேதி அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.
தற்போதும் பாரதிராஜாவை ஆறுதல் கூற திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து அவரது இல்லத்திற்கு வருகை தரி வருகின்றனர். இந்த நிலையில், இசைஞானி இளையராஜா, தனது நண்பரின் மறைந்த மகனுக்காக திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்ற இருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மனோஜ் ஆத்மா சாந்தி அடையும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே, பிரதமர் மோடியின் தாயார், எஸ். பி. பாலசுப்பிரமணியம், புனித் ராஜ்குமார் ஆகியோரின் மறைவின்போது, இளையராஜா இதேபோல் மோட்ச தீபம் ஏற்றி அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்ச தீபம் என்பது, மறைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையுவதற்காக ஏற்றப்படும் ஒரு சடங்காகும். பிரபலமான ஆலயங்கள், ஆசிரமங்கள், மற்றும் புனித நதிக்கரைகளில் இவ்வாறு மோட்ச தீபம் ஏற்றுவது, இந்துக்களின் வழக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com