காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்திய விவகாரம்.. இளையராஜாவுக்கு நீதிபதி கேள்வி..!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒப்புதல் பெறாமல் பயன்படுத்தியது குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒப்புதல் பெறாமல் பயன்படுத்தியது குறித்த வழக்கில் எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

இந்த விசாரணையில் ஒரு பாடலில் வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் என்பதால் பாடல் ஆசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும் என்று இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

முன்னதாக இளையராஜா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ’இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என்று தெரிவித்தார். ஆனால் எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இசையமைப்பதற்காக இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்று விடும் என்றும் தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிட்டது என்றும் கூறினர்.

இந்த வழக்கின் விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள் பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறியுள்ளனர்

 

More News

நிறை மாத கர்ப்பிணியிடம் இப்படியா நடந்து கொள்வது? சகிக்க முடியாமல் காதை பொத்தி கொண்ட அமலாபால்..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கணவரின் பாட்டு தொல்லை

ரஜினி, லோகேஷ் கனகராஜ் சம்பளமே 300 கோடிக்கும் மேல்? 'கூலி' படத்தின் பட்ஜெட் எவ்வளவு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த வீடியோ

நடிகையின் காதலை படமாக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.. 12 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சினிமா நடிகையின் காதல் தான் கதை

அஜித்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் 10 ஆண்டுகளாக வைத்திருந்த டைட்டில்.. நன்றி கூறிய பிரபல நடிகர்..!

அஜித்துக்காக ஏஆர் முருகதாஸ் கடந்த 10 ஆண்டுகளாக வைத்திருந்த டைட்டிலை தற்போது பிரபல நடிகரின் அடுத்த படத்திற்கு தந்துள்ள நிலையில் அந்த நடிகர் நன்றி தெரிவித்துள்ளார்.

அட்லி, அல்லு அர்ஜுன் இருவருக்கும் சம்பளம் கொடுக்காமல் படம் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்.. பரபரப்பு தகவல்..!

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லி ஆகிய இருவரும் மிகப்பெரிய சம்பளம் வாங்கும் நிலையில் இருவருக்கும் சம்பளம் கொடுக்காமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக