சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவிற்கு நேற்றுமுன் தினம் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. இதனால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமைனையில் உள்ள கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த பெண் வார்டன்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரிகளின் முடிவு இன்று மாலை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

தற்போது இளவரசிக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு உள்ளதால் அவர் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதற்கான பணிகளில் சிறைத் துறை நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்ட பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைத்துறை நிர்வாகம் கூறி இருந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

ஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றது

ஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்!

அமெரிக்காவின் 49 ஆவது துணை தலைவராக (அதிபராக) கமலா டி.ஹாரிஸ் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் நடிகை: குவியும் லைக்ஸ்கள்!

பிக் பாஸ் சீசன் 4 ஃபினாலே நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முந்தைய பிக்பாஸ் போட்டியாளர் ஷெரின் கலந்துகொண்டார் என்பதும்,

பேங்க் லாக்கருக்கே இந்த நிலமையா? அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலத்தின் வதோரோ நகரில் உள்ள ஒரு பேங்க் லாக்கரில் அதன் பயனாளி ஒருவர் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பத்திரமாக வைத்து உள்ளார்.