close
Choose your channels

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு!

Saturday, January 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவிற்கு நேற்றுமுன் தினம் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. இதனால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமைனையில் உள்ள கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த பெண் வார்டன்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரிகளின் முடிவு இன்று மாலை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

தற்போது இளவரசிக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு உள்ளதால் அவர் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதற்கான பணிகளில் சிறைத் துறை நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்ட பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைத்துறை நிர்வாகம் கூறி இருந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.