close
Choose your channels

இளையராஜாவுக்காக சமரசம் பேச சென்ற பாரதிராஜா: தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

Thursday, November 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து சமரசம் ஏற்படுத்த பாரதிராஜா சென்ற நிலையில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு கட்டிடத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த கட்டடத்தில் தான் அவர் இயக்குனர்களை சந்திப்பது முதல் பாடல்கள் கம்போஸ் செய்வது வரை அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தார்

இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா பயன்படுத்தப்பட்ட கட்டிடம் இழுத்து மூடப்பட்டது. இதனால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு சில நாட்களாக செல்லாமல் இருந்ததால் அவரது இசை பணிகள் முடங்கியது

இந்த நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக சமரசம் பேச பாரதிராஜா முன் வந்தார். அவருடன் பாக்யராஜ், சீமான், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்ற போது அவர்களை ஸ்டூடியோ நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அந்த இடத்தில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது பாரதிராஜா உள்பட 5 பேர் இளையராஜாவுக்கு ஆதரவாக சமூக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.