'பைரவா' படக்குழுவுக்கு இளையதளபதியின் இனிய பரிசு

  • IndiaGlitz, [Sunday,February 05 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி விநியோகிஸ்தர்களுக்கு லாபம் தந்த படங்களில் ஒன்றாக ''பைரவா' இருந்ததால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

இந்நிலையில் இளையதளபதி விஜய் தான் நடித்த ஒவ்வொரு படத்தின் படக்குழுவினர்களுக்கும் தனது கையால் பரிசு வழங்குவதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது 'பைரவா' படக்குழுவினர் அனைவருக்கும் தனது கையால் தங்கசெயின்களை தனது இனிய பரிசாக அவர்களது கழுத்தில் மாட்டிவிட்டார். படக்குழுவினர் அனைவரும் தங்களது நன்றியை இளையதளபதிக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது தயாரிப்பாக தயாரித்து வருகிறது.

More News

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் விஷாலின் அதிரடி அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விஷாலின் மன்னிப்பை ஏற்று சஸ்பெண்டை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். சஸ்பெண்ட் ரத்து செய்த சில நிமிடங்களில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக விஷால் அறிவித்தார்.

சசிகலா முதல்வர் ஆனபின் பொறுக்கிகளை அடக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ஜல்லிக்கட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்த போது பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழர்களை தனது சமூக வலைத்தளத்தில் 'பொறுக்கி' என்று கூறி இழிவுபடுத்தினார்.

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் தோனி மனைவிக்கு தொடர்பா?

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு ஒன்றில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியது உண்மையா? அதிர்ச்சி தகவல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பிய நடிகை கவுதமி, இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்வர் பதவியை நோக்கி சசிகலா.. விட்டு கொடுக்கின்றாரா ஓபிஎஸ்?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.