'புலி' டிரைலரின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிந்தது.

  • IndiaGlitz, [Friday,August 14 2015]

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி' படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வெளிவரும் என விஜய்யே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் புலி படத்தின் டிரைலரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் 'புலி' டிரைலரின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், டிரைலர் மிக அபாரமாக அமைந்துள்ளதாகவும் இந்த படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிகஸ் பணிகள் செய்துவரும் குழுவில் உள்ள @mohikartik தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் 'புலி' படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் இருந்து வரப்போகும் வரவேற்பை காண மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 'புலி' படக்குழுவினர் தங்களது சுதந்திர தின வாழ்த்துக்களையும் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளனர். விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், வித்யூலேகா ராமன், நந்திதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தை பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என உறுதியாகியுள்ளது.

More News

விக்ரம் வெளியிட்ட இரட்டை வேட ரகசியம்

விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தின் டீஸர் நேற்று இரவு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் விக்ரம்...

ஸ்ரீமந்துடு திரைப்படத்தை அப்பாவுடன் இணைந்து பார்த்த ஸ்ருதி

மகேஷ்பாபுவுடன் ஸ்ருதிஹாசன் நடித்த ஸ்ரீமந்துடு மற்றும் செல்வந்தன் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

படப்பிடிப்பில் காயமடைந்த ஸ்ருதிஹாசன் நாயகன்

பாலிவுட் திரையுலக கலைஞர்களுக்கு இது ஒரு இக்கட்டான காலம் போல தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 'பிகே'...

'வாலு' விநியோகிஸ்தர்களை உற்சாகப்படுத்திய செய்தி

பல்வேறு தடைகளை தாண்டி இன்று சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தின் இல்லையில் ...

பதவி உயர்வு பெற்றுள்ளேன். தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்

நடிகை சினேகாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதை அவருடைய கணவரும் பிரபல நடிகர் பிரசன்னா அறித்திருந்தார் என்பதையும் நாம் ஏற்கனவே...