அஜித்தின் 'வலிமை'யில் நாயகியாகும் விஜய் பட நடிகை?

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

தல அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கக் கூடிய நடிகை யார்? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நயன்தாரா, நஸ்ரியா உள்பட ஒரு சில நடிகைகள் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி இலியானா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’நண்பன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி நடிகை யாமி கவுதம் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. யாமி கெளதம் ஏற்கனவே ‘கெளரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக செய்தி வெளிவந்த பின்னரே இந்த படத்தின் நாயகி யார்? என்பது உறுதியாக தெரிய வரும்

அஜித் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தயாராகவுள்ள இந்த படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது
 

More News

கமல் படத்தில் நடிக்க மறுத்தாரா ராகவா லாரன்ஸ்?

சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், கமலஹாசன்

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது, கொழுப்பும் குறையும் - கணேஷ் சிங் MP (பாஜக).

சமஸ்கிருதம் பேசினால் நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சக்கரை அளவும், கொழுப்பும் அளவும் குறைந்து வரும் என பா.ஜ.க எம்.பி. கணேஷ் சிங் மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்

உதயநிதி ஸ்டாலின் கைது..!

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

இரண்டாவது கணவனை பிரிந்து முதல் கணவனின் மச்சினனுடன் 'தொழில்' செய்த சென்னை இளம்பெண் கைது!

முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து முதல் கணவரின் மச்சினனுடன் நட்புடன் பழகி வரும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர்

ரயில் தண்டவாளத்தில் குடும்பத்துடன் அமர்ந்து தற்கொலை: திண்டுக்கல் அருகே பரபரப்பு!

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது