தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்ட விஜய் பட நாயகி!

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை இலியானா, ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ’நண்பன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது தெரிந்ததே.

திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை தீவிரமாக காதலித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

காதல் தோல்வியால் மிகுந்த சோகத்தில் இருந்த இலியானா மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்றதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மன அழுத்தத்திற்கு சிகிச்சை செய்யும் போது தான் தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் தனது உடல் எடை அதிகமாகி விட்டது என்றும் அந்த பேட்டியில் இலியானா கூறியுள்ளார்.

இதனையடுத்து உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்று சென்று வருவதாகவும் ஆனால் தான் ஜிம்முக்கு செல்லும் போதும் ஒரு சிலர் தன்னை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதால் ஜிம்முக்கு செல்வதையும் தற்போது நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலியான நடித்த இந்தி திரைப்படமான ’பகல்பந்தி’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது என்பதும் அவர் மேலும் ’தி பிக் புல்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'தலைவி' படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்று இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் 'தலைவி'

பள்ளி மாணவியை கடித்த பாம்பு! ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

10 வயது பள்ளிச் சிறுமியை பாம்பு கடித்த நிலையில் ஆசிரியர்களின் அலட்சியத்தால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது 

அக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் அஜித்தின் 'விவேகம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில்

ரஜினியின் அதிசயம்-அற்புதம் பேட்டிக்கு முதல்வரின் உடனடி ரியாக்சன்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஐகான் விருதை பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை திரும்பினார்.

ஆம் 2021ல் அதிசயம் நடந்தே தீரும்: சீமான்

கோல்டன் ஐகான் விருதை பெற்று இன்று சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது, '2021 ஆம் ஆண்டு நடைபெறும்